தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 மில்லியன் டன் உணவுப்பொருட்களை இந்தியா வழங்கும் என்று இலங்கை சென்றுள்ள இந்தியவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கூறினார்.
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அரசியல் ரீதியாகத் தீர்வு காணும் வகையிலும் இலங்கை சென்றுள்ளஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அங்கே அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோரைச்சந்தித்துப் பேசினார்.
இலங்கை அரசு அழைப்பு விடுத்ததின் பேரில் ஜஸ்வந்த் சிங் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றார்.
அங்கே சென்ற அவர் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துப்பேசினார்.
பேச்சுவார்த்தை முடிவில் இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா உதவி செய்யும் என்று கூறினார்.
முன்னதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் டெம்பிள் ட்ரீஸ் பகுதியில் தங்களதுஇரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள்.
வெளியுறவுத் துறை அமைச்சரவையின் இணைச் செயலாளர் லீலா பொன்னப்பா, இலங்கைக்கான இந்தியத் தூதர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் இந்தப்பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர்.
முன்னதாக ஜஸ்வந்த் சிங் மற்றும் லட்சுமண்கதிர்காமர் ஆகியோருக்கிடையே நடந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியா-இலங்கை ஆகிய இருநாடுகளும் பலதரப்பட்ட விஷயங்களில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்து விவாதித்தனர்.
பேச்சுவார்த்தை முடிவில் ஜஸ்வந்த் சிங் இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அங்கு வாழும் மக்களுக்கு மனிதாபிமான முறையில்உதவி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக 100 மில்லியன் டன் உணவுப் பொருட்களை இந்தியா அளிக்கும். அங்குள்ள மக்களுக்காகநிதியுதவியும் அளிக்கும் என்றார்.
இலங்கை சென்றுள்ள அமைச்சர் ஜஸ்வந்த் சிங் திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு இந்தியா திரும்புகிறார்.
யு.என்.ஐ.