தமிழகத்தில் இன்று
பிஜியில் ஸ்பீடு சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
சுவா:
பிஜியில் ராணுவ சோதனைச் சாலையில் நிற்காமல் சென்ற புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் வாகனத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடுநடத்தினார்கள்.
இதில் ஸ்பீடு காயமின்றி உயிர்தப்பினார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் ஃபிலிப்போ தாராகினிகினி இதுகுறித்துக் கூறுகையில், சோதனைச் சாவடியில் இருந்த ராணுவத்தினர் அந்தக் குறிப்பிட்டவாகனத்தில் செல்பவர்கள் வாகனம் நிற்காமல் சென்றதால் அதில் செல்பவர்கள் யார் என்று தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்ததுதான் என்றார். இதற்காக ராணுவ ஆட்சியாளர்கள் ஜார்ஜ் ஸ்பீடிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
மேலும் வாகனச் சோதனையில் ராணுவத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஜார்ஜ் ஸ்பீடின் கார் வந்து கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் ராணுவத்தினர்யாருக்கும் அந்த வாகனத்தில் ஜார்ஜ் ஸ்பீடு பயணம் செய்கிறார் என்பது தெரியாது.
அந்த வாகனம் சைகை காட்டியும் நிற்காமல் சென்றதால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் காற்றில் சுட்டார்கள். பின்னர் அவர்கள் அந்தக் காரின்டயரை நோக்கிச் சுட்டார்கள்.
எம்-16 ரக துப்பாக்கியினால் ஒன்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சுட்டனர் என்றார்.
யு.என்.ஐ.