For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
போர் நிறுத்தம்: இந்தியாவுக்-கு தமிழர் கட்சிகள் கோரிக்கை

கொழும்பு:

யாழ்ப்பாணத்தில் அப்பாவி பொதுமக்களின் உயிர்ப்பலியைத் தடுக்கும் விதத்தில், உடனடியாக போரை நிறத்தி விட்டு அமைதித் தீர்வு காண வேண்டும் எனஇலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளை இந்தியா நிர்பந்திக்க தமிழர் கட்சிகள் கோரியுள்ளன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரச் ஜஸ்வந்த் சிங் தற்போது கொழும்பு சென்றுள்ளார். இதையொட்டி, நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழர் ஐக்கியவிடுதலை முன்னணிக் கட்சித் தலைவர் அனந்தசங்கரி பேசுகையில், யாழ்ப்பாணத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அங்கு போரை முடிவுக்குக் கொண்டுஇந்தியாவால் மட்டுமே முடியும்.

போரை நிறுத்தி விட்டு அமைதித் தீர்வு காண இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.

தமிழர்களின் விறுப்பு, வெறுப்புகளை மதிக்கும் வகையில் அமைதித் தீர்வு இருக்க வேண்டும் என இலங்கை அரசை, இந்தியா கேட்டுக் கொள்ள வேண்டும்என்றார்.

அனந்த சங்கரி தவிர, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் ஈழ விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளும்இக்கோரிக்கையை விடுத்துள்ளன. இந்தத் தலைவர்கள் அனைவரும் ஜஸ்வந்த் சிங்கையும் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X