சபாஷ் சரியான போட்டி...ஒரே நேரத்தில் 12 பேரை வென்ற ஆனந்த்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஒரே நேரத்தில் 15 பேருடன் நடந்த செஸ் போட்டியில், இந்திய கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 12 பேரை வென்றும்,மூன்று பேருடன் டிரா செய்தும் சாதனை படைத்தார்.
மாட்ரிட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டிக்கு, ஸ்பெயினைச் சேர்ந்த பார்வையற்றோர் நலக் கழகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தநிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒருவரான பாப்லோ கோர்பியா, ஆனந்தின் பரம ரசிகர் ஆவார். இவரே ஒரு செஸ் வீரரும் கூட.
கோர்பியா, முன்னாள் ஸ்பெயின் செஸ் சாம்பியன் மனுவேல் பலசியோஸ், மற்றொரு முன்னாள் சாம்பியன் எபுஜோ ஆகியோர் உள்பட 15 பேர் ஆனந்துடன்நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் 15 டேபிள்களில் இந்தப் போட்டி நடந்தது. போட்டியில் 12 பேரை ஆனந்த் வென்றார். மூன்று பேருடன் டிரா செய்துகொண்டார்.
போட்டிக்குப் பிறகு ஆனந்த் கூறுகையில், போட்டி உண்மையிலேயே கடினமாக இருந்தது. அனைவரும் சிறப்பாக என்னை எதிர்கொண்டனர். சிலர் வெற்றிபெறும் தருவாயில் இருந்தனர் என்றார் அவர்.
லியோன நகரில் நடந்த போட்டிக்குப் பிறகு இப்போதுதான் ஆனந்த் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள ஜெர்மன் செஸ் போட்டியை ஆவலுடன் எதிர்கொண்டிருப்பதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications