தமிழகத்தில் இன்று
தமி-ழ-க சட்-ட-மன்-றத் தேர்தலுக்-கு தயா-ரா-கி-ற-து தேர்-தல் -க-மி-ஷன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் சென்னை வருகிறார்.
தமிழக அரசு அதிகாகள், தமிழக கட்சித் தலைவர்கள் ஆகியோர்களுடன் அவர் மூன்று கட்டமாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் 15ம் தேதி சென்னை வருகிறார். 16ம் தேதி மாலை அவர் டெல்லி திரும்புகிறார்.
ராஜ்பவனில் தங்கும் அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகளுடன் 15ம் தேதி காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்தாண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும், வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவுஇயந்திரத்தை பயன்படுத்துதல் பற்றியும், வாக்காளர் கணக்கெடுப்பு குறித்தும் அவர் அதிகாரிகளுடன் விவாதிக்கிறார்.
மாலை 3.30 மணியளவில் தமிழகத்தில் உள்ள கட்சிப் பிரதிநதிகளை அவர் சந்தித்துப் பேசுகிறார். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின்தலைவர்கள், பிரதிநதிகளுடன் அவர் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலின் போது செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், வாக்காளர்கணக்கெடுப்பு விவரங்கள் பற்றி கட்சிகளின் கருத்தை அவர் கேட்டறிகிறார்.
தேவைப்பட்டால் 16ம் தேதி காலை 11 மணிக்கும் அவர் அரசியல் கட்சிப் பிரதிநதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை முடித்துக் கொண்டு மாலைடெல்லி திரும்புகிறார்.