இலங்கைப் பிரச்சனை குறித்து அமைச்-சர்-கள்-கருணாநிதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரவை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இலங்கைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கோட்டையில் கூடியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில் அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பகல் 12.25 மணி வரை நடந்த இக்கூட்டத்தில் இலங்கை பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அடுத்தாண்டில் தேர்தலை எதிர்நோக்கியுள்ளதால், அரசு நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திட்டப் பணிகளை துரிதமாக முடிக்கஅமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
திட்டப் பணிகளை முடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு என்ன காரணம்? அதை தவிர்க்க அரசு செய்ய வேண்டிய உதவிகள் என்ன? என்பது பற்றியும்கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications