தமிழகத்தில் இன்று
தங்-கம் வாங்-க கடன் கொ-டுக்-கி-ற-து ஸ்டேட் பாங்க்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
நகைக் கடைகள் தங்கம் வாங்க கடன் கொடுக்கும் திட்டத்தை கோவையில் ஸ்டேட் பாங்க் விரைவில் அமல்படுத்தவுள்ளது எனஸ்டேட் பாங்க் தலைமைப் பொதுமேலாளர் ராமச்சந்திர ராவ் கூறி-னார்.
-அ-வர் கூறி-ய-தா-வது:
கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரம் தங்க ஆபரணங்கள் செய்யும் பட்டறைகள் உள்ளன. இந்தபட்டறைகளின் தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையில் தங்கம் வாங்கக் கடன் வழங்கும் திட்டத்தை ஸ்டேட் பாங்க்அறிமுகப்படுத்தவுள்ளது.
அடுத்த 6 மாதங்களில் இத்திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும். இக்கடன்களுக்கு நியாயமானஅளவிலேயே வட்டி வசூலிக்கப்படும். இதனை வியாபாரிகள் -நல்ல -முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவை ஸ்டேட் பாங்க் கடந்த ஆண்டு தங்கம் விற்பனையில் 147 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் தங்கடெபாசிட்டில் 85 கிலோ அளவிற்கு தங்கத்தைக் கையாண்டுள்ளது. சென்னையில் உள்ள கிளைகள் 250 கிலோ தங்க நகைகளைடெபாசிட்டாகப் பெற்றுள்ளது.
அடுத்த 3 மாதங்களில் 500 கிலோ அளவிற்கு ஸ்டேட் பாங்க் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில்தங்கம் வாங்க கடன் வழங்கும் திட்டத்திற்காக 24 கிளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராமச்சந்திர ராவ் கூறினார்.