தமிழகத்தில் இன்று
வேலை பார்த்துக் கொண்டே நன்-றா-க படித்த +2 மாணவர்களுக்கு அரசு நிதியுதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இருவருக்கான மேற்படிப்புச் செலவை தமிழக அரசுஏற்றுள்ளது.
மதுரை திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் தட்டச்சுபாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் மாலை நேரத்தில் ஒரு குளிர்பான தயாரிப்புநிறுவனத்தில் தினக் கூலியாக வேலை பார்த்துக் கொண்டே படித்து இந்நிலையைப்பெற்றார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி மாணவர்மணிவண்ணன் கட்டடப் பராமரிப்புப் பாடத்தில் மாநில அளவில் மூன்றாம் இடத்தைபிடித்துள்ளார்.
மாணவர் மணிவண்ணனின் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால்,மணிவண்ணன் நெசவுக் கூடத்தில் நெசவு வேலை செய்து மருத்துவ செலவைகவனித்து வந்துள்ளார்.
கார்த்திக் மற்றும் மணிவண்ணனின் நிலையை பத்திரிகை வாயிலாக அறிந்த முதல்வர்கருணாநிதி, இருவரின் மேற்படிப்புச் செலவுக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியைமுதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.
இத்தொகை தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புமேம்பாட்டுக் கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு நிரந்த வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,அதன் மூலம் பெறப்படும் வட்டித் தொகையான 250 ரூபாய் மாதம் தோறும்அக்கழகத்தின் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றுதமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications