தமிழகத்தில் இன்று
8 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குற்றப்பத்திரிகை வாங்க மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 8 குற்றவாளிகள் குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்க மறுத்து விட்டனர். இவர்கள் மலையாள மொழியில்குற்றப்பத்திரிக்கையை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை கோவை தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் முன்னிலையில் 167 அல் உம்மாதீவிரவாதிகள் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்னை, கடலூர், மதுரை, பாளையம் கோட்டை, வேலூர் மற்றும் சேலம் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கோவை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களில் சேலம் சிறையில் இருந்த 36 பேர் குற்றப்பத்திரிக்கை நகல்கள் பெறாமல் இருந்தனர். வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமானால்,அனைவரும் குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினார்.
இதையடுத்து 36 பேரில் 28 பேர் குற்றப்பத்திரிக்கை நகல்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் 8 பேர் மட்டும் மலையாள மொழியில் குற்றப்பத்திரிக்கைநகல் கொடுக்க வேண்டும் எனக் கூறி, வாங்க மறுத்து விட்டனர். இவர்களுக்கு மலையாள மொழியில் நகல்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
நகல்கள் வழங்கப்பட்ட பின்னர், கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும்.
வெடிபொருள் சப்ளை செய்தவர் அப்ரூவர் ஆனார்:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 1.5 டன் வெடிமருந்து பொருட்களை சப்ளை செய்ததாக கைது செய்து செய்யப்பட்ட ரியாஸ் உர் ரகுமான், அரசு தரப்புசாட்சியாக மாறினார்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டுகள் தயாரிக்கத் தேவையான வெடி மருந்துகள் மைசூரில் உள்ள இந்தியன் எக்ஸ்புளோசிவ் கார்ப்பரேஷனில்பெறப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. ஒன்றரை டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் இங்கிருந்து சப்ளை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் இருந்த ரியாஸ் என்ற ரியாஸ் உர் ரகுமானை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
இவர் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் கூறினார்.
எனவே, நீதிபதி, அவரை அரசுத் தரப்பு சாட்சியாக ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, ரியாஸ் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் தனி வேனில் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications