முகத்தில் தெளித்த சாரல்...
அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் - தமிழக அரசு அறிவிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவையில் கொலை செய்யப்பட்ட கோட்டை அமீர் பெயரில் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட ஆணை:
கோட்டை அமீர் என்பவர் கோவையில் முஸ்லிம் மற்றும் இந்துக்கள் இடையே மத நல்லிணக்கத்துக்குப் பாடுபட்டவர். அவர் மத பகை கூடாது.இந்துக்களும், முஸ்லிம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்று பிரசாரம் செய்தவர். இதன் காரணமாக சில தீவிரவாதிகளால் 1994-ம் ஆணடுமார்ச் 16-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி பலியான அவர் பெயரால் அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ஆண்டுதோறும் சமய நல்லிணக்கத்துக்குப் பாடுபடும்ஒருவருக்கு வழங்கப்படும்.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இப் பதக்கம் வழங்கப்படும். இப் பதக்கம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரம்பொற்கிழி வழங்கப்படும்.