தமிழகத்தில் இன்று
நன்கொடை வசூலித்த பள்ளி நிர்வாகிகளை மிரட்-டி-ய நக்சட்ை-டு-கள்-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தர்மபுரி:
தர்மபுரியில் -மா-ண-வர்-க-ளி-டம் நன்கொடை வசூலித்த பள்ளி நிர்வாகத்தி-ரை நக்சலைட்டுகள் -துப்-பாக்-கி-யை காட்-டிமிரட்-டி எச்சரித்த-னர்.
திங்கள்கிழமை காலை தர்மபுரியை அடுத்த சோலைக்கொட்டாய் அரசுமேல் நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகத்தினர் பள்ளி வளர்ச்சிக்காக நன்கொடை வசூலித்தார்கள்.
அப்போது காலை 10.30 மணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குட்ட வாலிபர்கள் பலர் அங்கு வந்து நன்கொடைக்குஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர் அங்கு ஆள்நடமாட்டம் அதிகரிக்கவே அவர்கள் அனைவரும் அங்கிருந்துசென்று விட்டனர்.
பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதே கும்பல் பகல் 12 மணிக்கு பள்ளிக்கு வந்தது. பள்ளி வளாகத்தில்நன்கொடை வசூலித்துக்கொண்டிருந்தவர்களுடன் மீண்டும் தகராறு செய்-தனர்.
தகராறு முற்றவே அக்கும்பல் நக்சல் ஆதரவுக் கோஷம் எழுப்பினர். திடீரென்று அக்கூட்டத்திலிருந்த வாலிபர்ஒருவர் துப்பாக்கியால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை நோக்கிச் சுட முயன்றார். உடனே அங்கிருந்த பெருமாள்என்பவர் அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டார்.
அதன்பின் அங்கிருந்த வாலிபர்கள் அனைவரும் ஓட ஆரம்பித்தனர். அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள்அனைவரும் அக்கும்பலை விரட்டிக்கொண்டு சென்றனர். அந்த வாலிபர்கள் காட்டுப்பகுதிகள் ஓடி மறைந்துவிட்டனர்.
பின்னர் இதுகுறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று
நக்ச-லைட்-டு-கள் விட்டுச்சென்ற நோட்டீசுகளையும், பறிக்கப்பட்ட துப்பாக்கியையும் எடுத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்துப் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்யூ.பாலன்,குண்டல்பட்டியைச் சேர்ந்த ஆதிசின்னசசாமி, முருகன், நத்தத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, மேலும் அடையாளம்தெரியாத இருவர் ஆக ஆறுபேர் தான் வந்-த-ன-ர் என்று தெரிய வந்தது.
இவர்கள் நக்சல் அமைப்பான முற்போக்கு மாணவர் யூனியன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
இதுகுறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.