தமிழகத்தில் இன்று
நிலத்தைச் சுருட்டிய பா.ம.க. பிரமுகர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போலி கையெழுத்திட்டு நிலத்தை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலரைப்போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டைச் சேர்ந்தவர் பாலுமணி. இவர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பாலுமணி தனது தேவைக்காக 45ஆயிரம் ரூபாயை கதிர்வேல் என்பவரிடம் கடனாக வாங்கினார்.
கடனுக்கு அடமானமாக ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கதிர்வேலிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாட்டாளிமக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலராக உள்ள மாப்பிள்ளை ராஜாவிடம் கதிர்வேல் ஒரு லட்சம் ரூபாய் கடன்பெற்றிருந்தார். இதனைத் திருப்பித் தருமாறு ராஜா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கதிர்வேல் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். மீதமுள்ள தொகைக்குபதிலாக பாலுமணியிடமிருந்து பெற்ற நிலப் பத்திரத்தைக் கொடுத்துள்ளார்.
இந்தப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட ராஜா, அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடிவு செய்து 3.25 லட்ச ரூபாய்க்கு விலை பேசினார்.விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. இதில், ராஜாவின் உறவினர் பாலுமணியின் கையெழுத்தைப் போல போலிகையெழுத்திட்டுள்ளார்.
நிலம் விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து அறிந்த பாலுமணி அதிர்ச்சியடைந்தார். போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலிக்கையெழுத்துப் போட்டு நில மோசடி செய்ய முயற்சி செய்தது தொடர்பாக மாப்பிள்ளை ராஜாவையும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டரான வெள்ளிங்கிரிஆகியோரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications