தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை வந்த தொழிலதிபரிடம் ரூ. 7 லட்சம் நகை பறிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை வந்த நகைக் கடை அதிபரைக் கடத்தி ரூ. 7 லட்சம் நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் ரகு. இவர் சென்னையிலிருந்து தங்கம் வாங்கி வந்து நகைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.
வழக்கம் போல சென்னைக்குச் சென்று தங்கம் வாங்கிக் கொண்டு புதன்கிழமை கோவை வந்தார். டாக்சி ஒன்றில் வந்த அவரை ஒரு கும்பல்வழிமறித்து, கடத்திச் சென்றது. அவரிடம் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இச்சம்பவம் குறித்து ரகு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பலைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications