கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

மயான அமைதியில் தலித்கள் கொலை நடந்த கிராமம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:

விருதுநகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆறு தலித்கள் கொலை செய்யப்பட்ட வ.புதுப்பட்டி கிராமத்தில், மயான அமைதி நிலவுகிறது.

கடந்த 36 மணி நேரத்தில் எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். வ.புதுப்பட்டி கிராமம் முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆறு தலித் மக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதையடுத்து பீதியில் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறி, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்குச் சென்று மறைந்து விட்டனர். எதிர்த்தரப்பினர் தங்களைத் தாக்குவார்கள் என்று அஞ்சி அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.பெண்களும், குழந்தைகளும்தான் இப்போது கிராமத்தில் தங்கியுள்ளனர்.

வ. புதுப்பட்டி கிராமத்தில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கொலையாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

மாட்டுக் கொட்டகைக்குத் தீவைப்பு:

இதற்கிடையே, வ.புதுப்பட்டிக்கு அருகேயுள்ள ஜோதிநாயக்கனூர் என்ற கிராமத்தில் சில இளைஞர்கள் மாட்டுக் கொட்டகைக்குத் தீவைத்தனர்.

புதுப்பட்டிக் கொலைச் சம்பவம் தொடர்பாக சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாட்டுக் கொட்டகைக்குத் தீவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+