""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்

Subscribe to Oneindia Tamil
தமிழர் ப-கு-தி--க-ளுக்-கு அதி-க அதி-கா-ரம்:
கு-ழு அமைத்-து ஆர-ாய்-கி-ற-து இல-ங்-கை அர-சு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்-கு அதி-க அதி-கா-ரம் த-ரு-வ--து கு-றித்-து ஆராய 15 பேர் கொண்டசிறப்-புக் குழு ஒன்று அமைக்கப்பட்-டுள்-ள-து.

இக் கு-ழு-வில் ஆ-ளும் மக்-கள் கூட்-ட-ண கட்-சி--யைச் சேர்ந்-த 7 பே-ரும் -எ-திர்க் கட்-சி--யா-ன ஐக்-கி-ய ஜன-நா-யக் கட்-சி-யைச் சேர்ந்-த 8-பே-ரும் இக் கு-ழு-வில் இடம் பெ-று-வர்.

அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்-த முடிவெடுக்கப்பட்டது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகா மற்றும் அரசியல் பிரமுகர்களை சந்தித்ததையடுத்து இலங்கைப்பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பரிந்துரைகளை இலங்கை அதிபர் சந்திரிகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கே ஆகியோர்ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை அளிப்பது, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விசேஷ அந்தஸ்து அளிக்கும் வகையில் போதிய சட்டதிருத்தம் கொண்டுவருவது போன்ற பல்வேறு ஆலோசனைகளை இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி காஷ்மீருக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் போல் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சிறப்புச்சலுகைகள் கொடுக்க இலங்கை அரசு ஆலோசித்து வருகிறது.

முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இந்தியா திரும்பியதையடுத்து இலங்கை பிரச்சனை குறித்தும், அங்கு வாழும் தமிழர்கள் குறித்தும்அதிபர் சந்திரிகாவும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் விவாதித்தார்கள்.

இந்த விவாதத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்த இருவரும் முடிவெடுத்தனர். இதற்காக 15 பேர் கொண்டநிர்வாகக் குழு அமைக்கவும் தீர்மானித்ததாக இலங்கை விடுதலைக்கட்சி பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் ஜெயரத்னே தெரிவித்தார். இக்குழுவில் 7பேர் ஆளுங்கட்சியிலிருந்தும், 8 பேர் எதிர்க்கட்சியிலிருந்தும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

15 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைப்பது மூலம் வருங்காலத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு சரியான தீர்வு காண வாய்ப்பு ஏற்படும். அரசியல் ரீதியாகத்தீர்வு காண விடுதலைப்புலிகளும் இந்தக் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி 1987 ம் ஆண்டு வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அப்போது விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து இடைக்கால அரசுஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.

இந்திய ராணுவத்தின் உதவியுடன் 1988 ம் ஆண்டு இப்பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து வரதராஜா பெருமாளை முதல்வராகக்கொண்டு புதியஅரசு அமைக்கப்பட்டது. இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியதை அடுத்து 1990 ம் ஆண்டு வரதராஜபெருமாள் அரசு கலைக்கப்பட்டது.

தற்போது சந்திரிகா குமாரதுங்கா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் இணைந்து 15 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டிஅமைக்கத் தீர்மானித்தனர்.

இத்திட்டப்படி கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என்று சந்திரிகா அரசு முடிவெடுத்துள்ளது.

இப்புதிய திட்டம் குறித்து சந்திரிகா மற்றும் ரனில்விக்ரமசிங்கே ஆகியோர் இன்னும் சில நாட்கள் விவாதிப்பார்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+