For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

சொத்துக்களை மாற்றிக் கொள்வோமா?....கருணாநிதிக்கு ஜெ. சவால்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மன்னார்குடி:

தமிழக முதல்வர் கருணாநிதியிடம் எனது சொத்துக்களை ஒப்படைக்கத் தயார். அதேபோல, அவர் தனது சொத்துக்களை என்னிடம் கொடுக்கத் தயாராக இருக்கிறாரா என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சவால் விட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த திருமண விழாவில் ஜெயலலிதாபேசுகையில், முதல்வர் கருணாநிதி எங்கே சென்றாலும்,எங்கே மேடையேறினாலும்என் மீது சேற்றை வாறி வீசும் விதத்தில் பேசி வருகிறார். எனவே அவருக்குப் பதில்அளிக்க இந்த திருமண மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

கருணாநிதியைப் பொருத்தவரை நான் ஒரு சிம்மசொப்பனம். சிங்கத்தைப் பார்த்தவன்எப்போது பார்த்தாலும் சிங்கம், சிங்கம் என்று பயந்து கொண்டிருப்பான். அதைப்போல, 24 மணி நேரமும், ஜெயலலிதா, ஜெயலலிதா என கருணாநிதி புலம்பிக்கொண்டிருக்கிறார்.

எனக்கு 32 பங்களாக்கள் இருப்பதாக கூறி வருகிறார் கருணாநிதி. ஆனால்,அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைமறைக்கவே இவ்வாறு பொய்யாக கூறி வருகிறார்.

இந்த மேடையில் நான் கருணாநிதிக்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். அவர்மற்றும் அவரது மகன்கள், மகள்கள், மருமகன்கள் ஆகியோரின் சொத்துக் கணக்கைஅவர் பகிரங்கமாக வெளியிடத் தயாரா?. அதே போல, எனது சொத்துக்களை நான்அவரிடம் கொடுக்கிறேன். அதே போல, அவரது சொத்துக்களை என்னிடம் கொடுக்ககருணாநிதி தயாரா?.

திருக்குவளையில் வறுமையில் உழன்றவருக்கு எப்படி இப்படிக் கோடிக்கணக்கில்சொத்து சேர்ந்தது. திரைப்படத்தில் கதை எழுதி சம்பாதித்தாரா?. அப்படியேஇருந்தாலும், ஒரு படத்திற்கு அதிகபட்சம் 5000 கிடைத்திருக்குமா?. இவருக்கேஇவ்வளவு சொத்துக்கள் என்றால், நூற்றுக்கணக்கான படங்களில், கதாநாயகியாகநடித்த எனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்சினையில் அதிமுகவின் நிலை தெளிவானது. நிலையானது. அமைதித்தீர்வு காணப்பட வேண்டும்.தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X