கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லை என்கிறார் தமிழக காங். தலைவர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசலுக்கு இனி இடமிருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
திண்டிவனம் ராமமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவராகப் பதவியேற்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றபின் அவர் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து மூத்த தலைவர்களின் ஒத்துழைப்புடன் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காகவும், கட்சியைவலுப்படுத்துவதற்காகவும் போராடுவேன்.
முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மரகதம் சந்திரசேகர், குமரிஆனந்தன், எம்பி.சுப்ரமணியம், கேவி.தங்கபாலு ஆகியோரைச் சந்தித்துப்பேசினேன். அவர்கள் எனக்கு முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்தார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள்பணிகளை அமைதியாகவும், நுணுக்கமாகவும் செய்து வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் இனிமேல் கோஷ்டிப் பூசல் இருக்காது. காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக கோஷ்டிப்பூசல் இருந்து வந்தது. ஏனெனில்தொண்டர்களுக்கு கட்சிப் பணி கொடுக்கப்படாததே இதற்குக் காரணமாகும். மேல்மட்டம், கீழ்மட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல்எல்லாரும் ஒருமித்த கருத்துடன் வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களைச் சந்திப்பேன். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்மாற்றம் வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேர்தலில் வெற்றி பெறுவதே எங்களது நோக்கமாகும்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியூர் சென்றுள்ளதால் அவர் திரும்பி வந்ததும் அவரைச் சந்தித்துப் பேசுவேன். அதிமுகவுடன் எங்களுக்கு உள்ளகூட்டு இப்போதைக்குத் தொடர்கிறது. எங்கள் நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில்இருக்கும்.
இலங்கைக்கு ரூ 450 கோடி நிதியுதவி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்தப் பணம் யாழ்ப்பாணம்மட்டுமின்றி இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications