கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தமிழகத்தை கம்ப்யூட்டர் மயமாக்குவோம் என்கிறார் கருணாநிதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
தமிழ்நாட்டில் அனைத்துக் கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்த தமிழக அரசு பெரிய அளவில்நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரைமாவட்டத்திலுள்ள பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து என்ஜீனியர் கர்னல் ஜான் பென்னிகுக் சிலையைபொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், தனது சொத்துக்களை எல்லாம் ஈடாக வைத்து பென்னிகுக் இந்த அணையைக்கட்டினார். அணையின் மட்டத்தை 152 அடி உயரத்துக்கு உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி விரைவில்தனது முடிவுகளை வெளியிடும்.
அண்டை மாநிலங்களுடன் மனக்கசப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும்நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்காதவாறு சுமூகமாகத் தீர்க்க வேண்டும்.
தமிழகத்தை கம்ப்யூட்டர்மயமாக்க அரசு தீர்மானித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கம்ப்யூட்டர்பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும் இத்திட்டத்தைக் கொண்டுவர பெரிய அளவில் அரசுநடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications