கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
காஷ்மீர் சண்டையில் 7 தீவிரவாதிகள், 1 போலீஸ், ராணுவ வீரர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ராணுவவீரர் உள்பட 9 பேர்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் 5 பேர் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது.
ராம்போரா பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குலாம் ஹாசன் என்பவர் தீவிரவாதிகளால் வீட்டுக்குள்ளிருந்துவெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டார்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள கம்ப்ஹாரி பகுதியில் கூட்டு அதிரடிப் படை போலீசார் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள், புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
வடக்கு காஷ்மீரில் போபோரா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தினர் மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அப்பகுதியிலிருந்துதுப்பாக்கிகள், கிரானைட் வெடிப்பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
ராஜதானி பகுதியில் அப்துல் மற்றும் அபு ஹரீஷ் போன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அப்பகுதியிலிருந்து அவர்கள் விட்டுச்சென்ற 2 துப்பாக்கிகள், 4 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
அப்துல் ரசீத் சோபி, மற்றும் குலாம் முகமது சோபி ஆகியோர் பண்டிபுரா மற்றும் சாதூரா பகுதிகளிலிருந்துதீவிரவாதிகளால் கடத்திக்கொண்டு செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர் காஷ்மீரில் மறைவிடங்கள்அனைத்திலும் சோதனை நடத்தி கண்ணில் பட்ட தீவிரவாதிகளையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications