For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜஸ்வந்த் சிங் முயற்சிக்கு வாழப்பாடி ராமமூர்த்தி வரவேற்பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குச் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இலங்கைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள புதியதிருப்பம் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜஸ்வந்த் சிங் இலங்கை சென்று அங்கு தலைநகர் கொழும்பில் அதிபர் சந்திரிகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ரனில் விக்ரமசிங்கே, அங்குள்ள தமிழ்கட்சிகள் அனைவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இலங்கைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள நல்லதிருப்பமாகும்.

இவரது பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழ்மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு ஒன்றைசந்திரிகா அமைத்திருக்கிறார். இதை நான் வரவேற்கிறேன்.

இந்தக் குழு கூறும் ஆலோசனைகளை சந்திரிகா கண்டிப்பாய் செயல்படுத்துவார் என்று நம்புகிறேன்.

ஜஸ்வந்த்சிங் முயற்சியால்தான் சந்திரிகா குமாரதுங்கா தனது பிடிவாதப் போக்கிலிருந்து இறங்கி வந்திருக்கிறார்.

தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுஅமைத்திருக்கிறார். இது ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.

இந்தக் குழுவின் ஆலோசனைகள் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் உள்பட அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கும்.

அதிகாரப்பரவல் தொடர்பாக இக்குழு பரிந்துரை செய்யும் அனைத்து முடிவுகளையும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X