அஞ்சல்வழிக் கல்வி நிறுவனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
மற்றும்
திறந்தவெளிப் பல்கலைக் கழக அமைப்பு- (open university system)
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னைப் பல்கலைக் கழகம் தனது கல்விச் சேவையை வழக்கமான பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிஅமைப்புடன் நிறுத்திக் கொள்ளாமல், அஞ்சல் வழியிலும் திறந்தவெளிப் பல்கலைக் கழக அமைப்பு மூலம்விரிவுபடுத்தியுள்ளது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க முடியாத தமிழகத்தைச் சேர்ந்த மாணவ,மாணவியர்களும், இந்தியாவில் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டு மாணவ, மாணவியரும்சென்னைப் பல்கலைக் கழகத்தின இந்த அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தின் மூலம் பட்டம் பெறமுடியும்.
மூன்றாண்டு பட்டப் படிப்புகள் முறையான கல்வி அமைப்பு, திறந்தவெளிப் பல்கலைக் கழக அமைப்பு ஆகியஇரண்டின் மூலமும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இரண்டாண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகள் முறையானகல்வி அமைப்பின் மூலம் மட்டுமே அளிக்கப்படுகின்றன. இது தவிர சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளும்அளிக்கப்படுகின்றன.
சென்னைக்கு நேரடியாக வர முடியாத தமிழகத்தில் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவியாக முக்கியநகரங்களில் நேர்முகச் சேர்க்கை மற்றும் தொடர்பு மையங்கள் உள்ளன.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நேரடியாக சேர்ந்து படிக்க முடியாதவர்கள் இந்த அஞ்சல் வழிக் கல்விநிறுவனத்தில் சேர்ந்து படிப்பதன் மூலம் பல்கலைக் கழகத்தின் சிறந்த கல்வியைப் பெறுகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. பல வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழியில் சேர்ந்துபடிப்பதை விரும்புகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.