தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கையிலும் பாகிஸ்தானின் "லொள்-ளு" ஆரம்-பம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இலங்கையில் கால்பதிக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ராணுவஅதிகாரி நீதிபதி டிசோஸா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ. அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்குள் தனதுஉளவாளிகளை ஊடுருவவிட்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்குஎதிரான தனது நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கையை தனது மற்றொரு களமாகப்பயன்படுத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் நுழைய சரியான வாய்ப்பை எதிர்பார்த்து அந்த அமைப்பு காத்திருக்கிறது. இலங்கை ராணுவத்துடன்போரிட்டு வரும் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களைச் சொல்லி அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுகொஞ்சம் கொஞ்சமாக இலங்கையில் ஊடுருவ அது முடிவு செய்துள்ளது.

இலங்கையில் நுழைந்துவிட்டால், அங்கிருந்து இந்தியாவுக்குத் தொல்லை தரலாம் என்பது ஐ.எஸ்.ஐ. அமைப்பின்திட்டம். தற்போதுள்ள சூழ்நிலையில், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக்கூடாது. ஆனால், மனிதாபிமானஅடிப்படையில் உதவி செய்யலாம்.

ஐ.எஸ்.ஐ. அமைப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும். ஏற்கெனவே, அந்தஅமைப்பின் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள்இப்போது வடகிழக்கு மாநிலங்களிலும் ஊடுருவியுள்ளனர். ஆகவே, இது பற்றி மத்திய அரசு தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

இந்தியாவுடன் நேரடியாக மோத பாகிஸ்தானுக்கு தைரியமில்லை. அதனால், தீவிரவாதம் போன்றநடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருகிறது என்றார் டிசோஸா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+