கபில் தேவிடம் வருமான வரித்துறையினர் 4 மணி நேரம் விசாரணை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியின் பயிற்சியாளருமான கபில்தேவிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணைநடத்தினர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும், எனக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முன்வந்ததாகவும், தான்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ்பிரபாகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், சிபிஐக்கு இணையாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் வருமானக் கணக்கை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச் சோதனையின் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு லஞ்சம் வாங்கியிருப்பார்களா என்பது தெரியவரும்.
இந் நிலையில், மும்பையைச் சேர்ந்த கட்டடக் காண்ட்ராக்டர் ராம்னிக் சாவ்தா வீட்டில் 1997-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது கிடைத்த டைரியில், அவருக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்ப் பட்டியல் இருந்தது. அதில், கபில் தேவின் பெயரும் இருந்தது.
இது குறித்து, கணக்கில் காட்டாமல் ராம்னிக் சாவ்தாவுக்குக் கொடுத்த பணம் குறித்து கபில் தேவிடம் வருமான வரித்துறையினர் தில்லியில்ஞாயிற்றுக்கிழமை 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications