தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி: 3 பேர் கைது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

கம்ப்யூட்டர் பயிற்சி முடிந்ததும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மாணவர்களிடம் ரூ 15 லட்சம் மோசடி செய்த கம்ப்யூட்டர் கல்வி நிலைய உரிமையாளரும்,இதற்கு உடந்தையாயிருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கம்ப்யூட்டர் கல்வி நிலையம் நடத்தி வருபவர் ராஜன் சந்தோஷ். இவர் தனது நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றால்முதல் ஆறு மாதப் பயிற்சிக்குப் பின் ரூ 5000 உதவித் தொகையும், 9 மாத பயிற்சி முடித்தால் ரூ 9000 உதவித்தொகையும் வழங்கப்படும் என்றும்கூறினார்.

இதையடுத்து 14 மாணவர்கள் பயிற்சியில் சேர்ந்தனர். தனது நிறுவனத்திற்காக ரூ. 24 லட்சத்து 75 ஆயிரம் பெறுமானமுள்ள 73 கம்ப்யூட்டர்கள்வாங்கினார். ஆனால் சொல்லியபடி, மாணவர்களுக்கு ஆறுமாதப் பயிற்சிக்குப் பின் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் மாணவர்கள்அனைவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கம்ப்யூட்டர் கல்வி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்துபோலீசார் அவரையும், அவரது கல்வி நிலையத்தில் அவருடன் வேலை செய்த ஊழியர்கள் மானேஜர் மற்றும் அக்கவுன்டன்ட் ஆகியோரையும் கைதுசெய்தனர்.

விசாரணையில் ராஜன் சந்தோஷின் உண்மையான பெயர் ராஜ்குமார் என்று தெரிய வந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+