For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசாருதீனுக்கு பாரதீய ஜனதா கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விஜயவாடா:

நான் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் என்மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள்கூறப்படுவதற்குக் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகம்மது அஸாருதீன் கூறியிருப்பது தவறு என்றுபாஜக பொதுச் செயலாளர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

விஜயவாடாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அசாருதீன் உள்பட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், தன் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதற்குத் தான் சிறுபான்மையினர் வகுப்பைச்சேர்ந்தவன் என்பதுதான் என்று அஸாருதீன் கூறியுள்ளார். இது தவறானது. யாரும் எதிர்பார்க்காதது.

அஸாருதீன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்குப் பல ரசிகர்கள் உள்ளனர். அவரது திறமையால்தான் இந்தியஅணியில் இடம் பெற்றார். பின்னர் அணி கேப்டனாக உயர்ந்தார். ஆனால், அவர் சிறுபான்மையினர் வகுப்பைச்சேர்ந்தவர் என்பதாலோ, இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

அஸாருதீனின் நம்பகத்தன்மையை யாரும் குறை கூறவில்லை. ஆனால், தன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதற்குசிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதுதான் என்று கூறுவதன் மூலம் அதற்கு அஸார் மதச் சாயம்பூசுவதை விரும்பவில்லை.

யாராக, எந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்கஅவருக்கு போதுமான அவகாசம் தரப்படவேண்டும். அஸார் விஷயத்திலும் இது கடைப்பிடிக்கப்படும்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள தீன்ஷாவும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ஷானவாஸ்உசேனும் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை இங்கு நினைவுபடுத்த நான்விரும்புகிறேன் என்றார் வெங்கய்யா நாயுடு.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X