தமிழகத்தில் இன்று
ஒன்..டூ...த்--ரீ...: தேர்-த-லுக்-கு தயா-ரா-கி-ற-ா-ர் மூப்-ப-னார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை தயார்படுத்துவதற்கான செயல்திட்டங்களை முடிவு செய்வதற்காக தமாகாவின் உயர் மட்ட அமைப்பானஅரசியல் விவகாரக் குழு சென்னையில் கூடியது.
கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களுடன் தேர்தல் யுக்தி குறித்து மூப்பனார் ஆலோசனை -நடத்தினார்.
அதிமுக, தி-முக போல் தமாகாவின் மாவட்ட அமைப்புகள் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட -நிர்வாகிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். வரவிருக்கும்சட்டமன்றத் தேர்தலை எதிர்-நாக்கி இந்த மாற்றங்களை -மூப்பனார் செய்து வருகிறார்.
அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இக்கட்சி, அதிமுக கூட்டணி -மூலம் இழந்த செல்வாக்கை மீட்டு விடலாம் என எண்ணியது. ஆனால், அதிலும்இக்கட்சி தோல்வியை கண்டு விட்டதால், கட்சியை பலப்படுத்தி மக்கள் பிரச்னைகளில் அக்கறை செலுத்துவதன் -மூலமே இழந்த செல்வாக்கை பெற -முடியும்என்ற -முடிவுக்கு இப்போது வந்துள்ளது இக்கட்சி.
அதன் காரணமாக கட்சியில் மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதிமுக பாணியில் புதியவர்களுக்கு பொறுப்புகள் தரப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக மற்ற அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு -முந்தைய செயல் திட்டமாக சில பணிகளை இக்கட்சி வகுத்துள்ளது. சென்னையில் ஞாயிறன்று -மூப்பனார்தலைமையில் கூடிய தமாகாவின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் இவை -முடிவு செய்யப்பட்டன.
காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவதே லட்சியம் என்று முழக்கமிட்டு வரும் தமாகா, ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த -நாள் விழாவை சிதம்பரத்தில் மிகப்பெ-ரிய அளவில் கொண்டா-ட திட்-ட-மிட்-டுள்ள-து. தமாகாவின் தேர்தல் யுக்தியின் அடையாளமாக இக்கூட்டம் அமையும் என்று அக் கட்சித் -தலைவர்கள்தெரிவித்தனர்.