கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளில் க-டும் நிலநடுக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மணிலா:
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளில் திங்கள்கிழமைகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக முக்கியத் தீவான லுசானில் காலை 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டெர்அளவு கோலில் அதன் பாதிப்பு 5.7 என்று பதிவாகியது.
நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அது பற்றிய முழு விவரம் தெரியவில்லை என்றும்அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நிலநடுக்கத்தால் லுசான் தீவில் உள்ள பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5 என்று ரிக்டெர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின்கோகோஸ் தீவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றியும் தகவல் ஏதும் இல்லை. இத் தீவில் இதுவரைஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவே பெரிது என்றாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இலை என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.
மத்திய தைவான் நாட்டில் காலை 6.45 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்கெட் அளவு கோலில் 5.3என்று பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் உடனடி தகவல் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications