தமிழகத்தில் இன்று
சுவாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக நடந்து வந்த வழக்கின் விசாரணையை தள்ளுபடிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995-ம் ஆண்டு நடந்த ஒரு பொதுக் கூட்டத்தின் போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து அவர் பேசியதாகக் கூறி அவர் மீது அதிமுகபிரமுகர் சந்திரசேகரன் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், ஜெயலலிதாவை அச்சுறுத்தும் விதத்தில் சுவாமி பேசியதாகக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மே 3-ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சுவாமிமனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா, 1995-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி சென்னை தாம்பரத்தில், பொதுக்கூட்டமொன்றில் சுவாமி பேசியதுதொடர்பாக ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவப்பா, குற்றப் பிரிவு 506-வது பிரிவின் கீழ் குற்றத்துக்குரிய பேச்சாககருத் முடியாது. வெறுமனே கோபமாக பேசுவதால் மட்டும் அதை குற்றமாக கருதி விட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
அதேபோல, புதுக்கோட்டை வழக்கிலும், நீதிபதி சிவப்பாவின் தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த வழக்கை தொடர்ந்துநடத்துவது, சட்டத்தை அவமதிப்பது போலாகும் என்று கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications