கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

பிரபாகரனின் பெற்றோரைப் பார்த்ததில் தவறில்லை - வைகோ

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாய், தந்தையை பார்த்ததில் தவறு எதுவும் இல்லை என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நடந்த மதிமுக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அடுத்த மாதம் ஈரோட்டில் மாநாடு நடத்தப் போகிறோம். இது சாதாரண மாநாடு அல்ல. மாநிலங்களுக்கு இடையேஒற்றுமையை வளர்க்கும் மாநாடு. காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தை விரட்டிய வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்குநன்றி தெரிவிக்கும் மாநாடு.

நாங்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட மாட்டோம். ஆனால், நேரம் கனிந்து வரும்போது அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். இனிமேலும் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதுவும் காங்கிரஸ் அல்லாத கூட்டணிஆட்சியாக அது அமையும்.

காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் அதனுடைய சர்வாதிகாரம் தான். காங்கிரஸ் தற்போது இறுதி யாத்திரை சென்றுகொண்டிருக்கிறது. அது மாநிலத் தலைமைகளை மதிப்பதில்லை. அதனால் தான் உத்தரப்பிரதேசம்,ஆந்திரப்பிரதேசம் போன்ற தனது கோட்டைகளையே அக்கட்சி இழந்தது.

பிரபாகரனின் தாய், தந்தையர் திருச்சியில் 15 ஆண்டுகளாக எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது உடல்நலமில்லாமல் இருக்கின்றனர். அவர்களைப் போய் பார்த்து உடல் நலம் விசாரித்தேன். அதைச் சிலர்பெரிதுபடுத்துகிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள்.

பிரபாகரனின் தாய், தந்தையைப் பார்த்ததில் என்ன தவறு இருக்கிறது? ஏதாவது சூழ்ச்சி செய்து எங்களுக்குப்பிரச்சினை ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறார்கள். எந்த சூழ்ச்சியும் எங்களை ஒன்றும் செய்யாது.

ஜெனிவா மாநாட்டுக்குச் சென்று மனித உரிமைக் கமிஷனிடம் சிங்கள வஞ்சக திட்டத்தை விவரித்தேன். புகைப்படஆதாரங்களோடு எடுத்துரைத்தேன். நியாயத்தை எடுத்துச் சொன்னபோது சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டுவரும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+