For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தாய்-லாந்-தில் பு-லி-கள் செயல்-பா-டு இல்-லை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

எங்கள் நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதநடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவில்லை என்று தாய்லாந்து நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள முக்கிய கப்பல் கட்டும் தளத்தில் பாதி அளவு கட்டப்பட்ட நிலையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது. சீ டைகர்ஸ்" என்று அதில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் கட்டும் தளத்தில் சட்டவிரோதமாக புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டதாகக்கூறப்பட்டது.

அப்போது, எங்கள் நாட்டை எந்த ஒரு தீவிரவாதக் கும்பலும் தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப்பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தாய்லாந்து அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கான தாய்லாந்து தூதர் தாக்ரு பானிட் கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது எங்கள் நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் நாட்டைப்பயன்படுத்தி எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில்ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார் அவர்.

மேலும், கப்பல் கட்டும் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலும் புலிகளுக்குச் சொந்தமானதல்ல. அக்கப்பல் தாய்லாந்து கடல்பகுதியில் கண்காணிப்புப் பணிக்குப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. அந்த கப்பல்கட்டும தளத்துக்கு உரிமையாளரான ரெஜினால்ட் லாரன்ஸுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X