தமிழகத்தில் இன்று
வி-ரை-வில் பெட்-ரோல் ஏற்-று-ம-தி செய்-யும் இந்-தி-யா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது. விரைவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.
சென்-னை-யில் நி-ரு--பர்-க-ளி-டம் அவர் கூ-று-கை-யில்,
தமிழகத்தில் கூடுதலாக 6 இடங்களில் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு -நடத்தி வருகிறது. திருச்சியில்ஒரு தொழிற்சாலை அமைக்க 50 ஏக்கர் -நிலம் கையகப்படுத்துமாறு மாவட்ட கலெக்ட-ரிடம் கூறியுள்ளேன்.
ஒவ்வொரு ஆலையும் 20 முதல் 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. பெட்ரோல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது. பெட்ரோல்ஏற்றுமதி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
சமையல் காஸ் உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் 2 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்காக மட்டும் ஆண்டிற்கு ரூ54 ஆயிரம் கோடி இறக்குமதி செலவு செய்ய வேண்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இம்மாத இறுதியில் ஆய்வுமேற்கொள்ளப்படவுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திச் செலவு விலைகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்படும்.
நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மேலும் 25 இடங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில்தமிழகத்தில் உள்ள காவி-ரி டெல்டா பகுதியும் அடங்கும்.
நாடு மு-ழுவதும் 14.5 லட்சம் பேர் சமையல் -காஸ் இணைப்பு கேட்டு காத்திருக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்றார்அமைச்சர்.