கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இலங்கைக்கு ஐ.நா. அமைதிப் படை அனுப்ப யோச-னை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> டெல்லி:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தஇலங்கைக்கு ஐ.நா. சபையின் அமைதிப் படை அனுப்பப்படவேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் தேர்தல்கமிஷனர் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடந்தபோது பார்வையாளராகச் சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி,டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதாவது:
விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போரை முழுவுக்குக் கொண்டு வரஇலங்கைக்கு ஐ.நா.வின் அமைதிப் படை அனுப்பப்படவேண்டும். இலங்கையில் அமைதி இல்லையென்றால்,தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் (சார்க் அமைப்பு) அமைதி இருக்காது.
இலங்கைப் பிரச்சினை என்பது ஒரு சர்வதேச பிரச்சினை. சர்வதேச கடல் வழிப் பாதையில் உள்ளது இலங்கை.ஆகவே, அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாடுகள் முயற்சிக்கவேண்டும். இப் பிரச்சினைக்குவன்முறை ஒரு போதும் தீர்வாகாது என்றார் கிருஷ்ணமூர்த்தி.
யு.என்.ஐ.