தமிழகத்தில் இன்று
ஹலோ, வைகோ நீங்-க என்-ன கோபி அன்-னா-னா? வாழப்-பா---டி கேட்-கி-றார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் போல் தன்னை நினைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்னையில் பிரதமருக்குபுத்திமதி சொல்வதை வைகோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திகூ-றி-னார்.
சென்னையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது பற்றி ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை இலங்கை அதிபர்சந்திரிகா அமைத்துள்ளார். இந்த வாய்ப்பை விடுதலைப்புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ராஜீவ்காந்தியும், பிரேமதாசாவும் ஏற்படுத்திய உடன்பாட்டை புலிகள் நிராக-ரித்தனர். இப்போது இரண்டாவதுவாய்ப்பு புலிகளுக்கு தரப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த தவறினால் உலகம் அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விடும்.
பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் புலி ஆதரவில் தீவிரம் காட்டத் துவங்கி விட்டன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத உதவிசெய்வது பற்றி பிரதமர் வாஜ்பாயை சந்தித்து வைகோ பேசியுள்ளார். வைகோ கோபி அன்னான் அல்ல. இந்தியாவின்வெளியுறவுக் கொள்கை பற்றி வைகோ விவாதிப்பது அ-நாக-ரீகமானது.
இலங்கைப் பிரச்னையில் இந்தியா தலையிடுவது இல்லை என்று மு-டிவெடுத்துள்ளது. ஆனால், மற்ற -நாடுகள் உதவுவதைஇந்தியா எப்படி தடுக்க -முடியும்? செஞ்சோற்றுக் கடனுக்காக வைகோ இந்த மாதிரி அநாக-ரீகமான செயலில் ஈடுபடக் கூடாது.
இப்பிரச்னையில் இந்திய அரசின் நிலையை வைகோ ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது -மத்-தி-ய அரசாங்-கத்-தில் இருந்துவெளியேற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வைகோவும், ராமதாசும் விலகுவதால் அதன் வெற்றி வாய்ப்புதமிழகத்தில் எந்த பாதிப்பும் அடையாது.
அடுத்த முறை -நான் பிரதமரை சந்திக்கும் போது இதுபற்றி எடுத்துரைப்பேன். அந்த இரு கட்சிகளையும் மத்திய அரசில் இருந்துவெளியேற்றும்படி வலியுறுத்துவேன். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று சுப்ரமணியசாமி யோசனை தெ-ரிவித்துள்ளார். இதுரொம்ப -நல்ல யோசனை. அதைக் கேட்டு -மூப்பனார் அவசியம் செயல்பட வேண்டும் என்று கிண்டலாக கூறினார் வாழப்பாடிராம-மூர்த்தி.












Click it and Unblock the Notifications