கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் - நம்-பு-கி-றார் கிரெக் சேப்பல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மீது மக்களுக்குஏற்பட்டுள்ள அவநம்பிக்கை குறைந்து கிரிக்கெட்டுக்கு மீண்டும் மவுசு கூடும் என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணித்தேர்வாளருமான கிரெக் சேப்பல் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிஃபித் சர்வதேச விளையாட்டுப் பல்கலைக் கழகமையத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக பலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருகின்றன. இதனால், கிரிக்கெட் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.விரைவில் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது.
மீண்டும் மக்களிடையே கிரிக்கெட்டுக்கு வரவேற்பு கூடும். தற்போது ஏற்பட்டுள்ளபிரச்சினை ஒரு தாற்காலிகமான சிறிய பிரச்சினைதான். நல்லவேளையாக மேட்ச்பிக்ஸிங்கில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். நிறைய வீரர்கள் இதில்ஈடுபட்டிருந்தால் கிரிக்கெட் விளையாட்டுக்கு அதுவே பெரிய பிரச்சினையாகஇருந்திருக்கும் என்றார் சேப்பல்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications