மன அ-ழுத்-தத்-தில் குரோனியே. ஆனா-லும், விசாரணை தொடர்கி-ற-து...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் டவுன்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்சிகுரோனியேவிடம் புதன்கிழமை விசாரணை தொடங்கியது.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஹான்சி குரோனியே மீதுகுற்றச்சாட்டு கூறப்பட்டது.
இக் குற்றச்சாட்டைக் கூறிய டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், அதற்கு ஆதாரமாக சூதாட்டக்காரரிடம் குரோனியேபேசியதை டேப்பில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியில் இருந்தும், கேப்டன் பதவியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார். அவர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங் தலைமையில் தனி விசாரணைக் கமிஷன்நியமிக்கப்பட்டது.
முதலில் தன் மீதானக குற்றச்சாட்டுகளை மறுத்த குரோனியே பின்னர் அவற்றை ஒப்புக் கொண்டார். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
3-வது வாரமாக தனது விசாரணையை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் கமிஷனில் குரோனியேவிடம் மீண்டும்புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. குரோனியேவுக்கு முன்னதாக மனநல மருத்துவர் இயான் லூயிஸ்சாட்சியம் அளித்தார்.
குரோனியே மருத்துவரீதியாக மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், இருப்பினும் அவரால் சாட்சியம் அளிக்கமுடியும்என்று லூயிஸ் தெரிவித்தார்.லூயிஸுக்குப் பிறகு குரோனியேவிடம் விசாரணை நடத்தப்பட்டது.