Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சியோராலியோனில் 2 இந்திய வீரர்கள் விடுதலை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ப்ரீடவுன்:

சியோரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த இரண்டு இந்திய வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சியோரா லியோனில் அரசுக்கும், புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாதிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் கடந்த மே மாதம் முறிந்தது. இதையடுத்துதீவிரவாதிகள் வன்முறையில் இறங்கினர். அவர்களை ஒடுக்க ஐ.நா. அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. இதில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.கைலஹான் பகுதியில் பணியில் இருந்த இந்திய வீரர்களை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுப் பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் 2 பேர் தற்போதுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

சியோரா லியோனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் இத்தகவலைநிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கைலஹான் என்ற பகுதியில் 200 இந்திய அமைதி காக்கும் படை வீரர்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். மே மாதம் முதல்அவர்கள் தீவிரவாதிகள் பிடியில் உள்ளனர். தற்போது இரண்டு இந்திய வீரர்களை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட இரண்டு பேரும் டாருவு நகருக்குச் சென்று அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் ப்ரீடவுன் செல்வார்கள். கைலஹானிலிருந்து டாரு 45கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தீவிரவாதிகள் பிடியில் மொத்தம் 222 இந்திய அமைதிகாப்பாளர்களும், 11 ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் பிணைக் கைதிகளாக உள்ளனர்என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+