தமிழகத்தில் இன்று
எஸ்.எஸ்.எல்.சி. தேர்-வில் 70 சத-வீ-த மாண-வ-மாண-வி-கள் வெற்-றி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு -மு-டிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதிய 6 லட்சத்து 89 ஆயிரத்து 743 மாணவ மாணவிகளில் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல்மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் தேர்ச்சி சதவீதம் 73.
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வுகள் ஆகியவற்றிற்கான தேர்வு-முடிவுகள் சென்னையில் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. தமிழக அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் இம்-முடிவுகளைவெளியிட்டது.
தமிழகத்தில் இவ்வாண்டில் பள்ளிகள் மற்றும் தனியாக தேர்-வு எ-ழு-தி-ய-வர்-க-ளி-ன் மொத்-த எண்-ணிக்-கை 6 லட்சத்து 89 ஆயிரத்து743 பேர். இவர்களில் பள்ளிகள் மூலம் தேர்--வெ-ழு-தி-ய- மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சத்து 61 ஆயிரத்து 651.
தேர்வு எழுதிய இவர்களில் 70 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம்66.9 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 73 சதவீதம்.
60 சதவீதத்திற்கு மேலாக (முதல் வகுப்பு) மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 12 பேர். அதாவது40.24 சதவீதம்.
நூற்றுக்கு நூறு:
கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியவர்கள் 2,434 பேர்.
அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியவர்கள் 1,350 பேர்.
ச-மூக அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள் 64 பேர்.
மெட்ரிகுலேஷன் தேர்வு
மெட்ரிகுலேஷன் தேர்-வை மொத்தம் 70,858 மாணவ மாணவிகள் எ-ழு-தி-னர். பள்ளிகள் -மூலம் பங்கேற்ற மாணவர்கள் 63,399பேர். மொத்த தேர்ச்சி விகிதம் 91 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92சதவீதம்.
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் 51 ஆயிரத்து 347 பேர். அதாவது 75.70 சதவீதம்.
கணிதத்தில் -முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 168 பேர். அறிவியலில் 5 பேர்.
ஆங்கிலோ இந்தியன் பள்ளித் தேர்வு
ஆங்-கி-லோ இந்-தி-ய பள்-ளி-க-ளில் மொத்தம் 4,806 மாணவ மாணவிகள் 10ம் வ-குப்-புத் -தர்-வு எ-ழு-தி-னர். இவர்களில் பள்ளிகள்மூலம் தேர்வில் பங்கேற்றவர்கள் 4,723 பேர். இத்தேர்வில் 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.5 சதவீதம்.மாணவிகள் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 3,820 பேர். அதாவது 80.88 சதவீதம்.
கணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 84 பேர். அறிவியலில் 2 பேர் நூற்-றுக்-கு நூ-று மதிப்-பெண் பெற்-றுள்-ள-னர்.