தமிழகத்தில் இன்று
போரில் உயிர் நீத்த 22 ஆசிய அமெரிக்கர்களுக்கு வீரப் பதக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
இரண்டாவது உலகப் போரின்போது கடும் தீக்கு மத்தியிலும் வீரத்துடன் போரிட்ட ஆசிய பசிபிக் அமெரிக்கர்கள் 22 பேருக்கு அமெரிக்காவின் உயரியவிருதான யு.எஸ்.கம்பேட் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில், புதன்கிழமை நடந்த விழாவில் இந்த பதக்கம் வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் அமெரிக்காவுக்காப் போரிட்டு உயிர் நீத்தசிறுபான்மைப் பிரிவினரை கெளரவிக்க அரசு சார்பில் எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகவே இந்த உயரிய பதக்கம் 22 ஆசிய பசிபிக் அமெரிக்கர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பதக்கங்களை வழங்கி அதிபர் கிளிண்டன் பேசுகையில், அமெரிக்காவுக்காக போரிட்டு உயிர் நீத்த ஆசியர்களைக் கெளரவிக்க வேண்டும் என்பதுநீண்ட நாட்களாக இருந்து வரும் கோரிக்கை ஆகும். அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது என்றார்.
பதக்கம் பெறத் தேர்வு செய்யப்பட்டவர்களில் 7 பேர் மட்டுமே பதக்கம் பெற நேரில் வந்திருந்தனர். மற்ற அனைவரும் இறந்து விட்டனர். அவர்கள்சார்பில் அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.