தமிழகத்தில் இன்று
குவைத்தில் கடத்தல், கற்பழிப்பில் போலீஸ்- ராணுவ அதிகாரிகள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">குவைத்:
கடத்தல், கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த நான்கு பேர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரிஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வேலியே பயிரை மேய்வது போன்ற இச்சம்பவம் குவைத்தில் நடந்துள்ளதாக அங்கு வெளியாகும் பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
நான்கு பெண்களைக் கடத்தி, அவர்களைச் சித்ரவதை செய்து கற்பழித்தது தொடர்பாக இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 அதிகாரிகளும் அபார்ட்மென்ட் ஒன்றில் பெண்களைக் கடத்தி வந்து கொடுமைப்படுத்தி கற்பழித்தார்கள். அதே அபார்ட்மென்டில் கிடைத்தவீடியோ டேப் ஒன்றில் இவர்கள் பெண்களைக் கற்பழித்து கொடுமைப்படுத்தியது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ டேப்பை போலீசார்சாட்சியமாகக் கைப்பற்றியுள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் 3 பேர் தேசிய பாதுகாப்பு உறுப்பினர்களாகவும், ஒருவர் குவைத் ராணுவ அதிகாரியாகவும், ஒருவர் போலீஸ்அதிகாரியாகவும் உள்ளார்கள் என்று போலீசார் சந்தேகப்படுவதாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் 5 பேரிடமும் விசாரணை நடந்த வருகிறது. இவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் கருத்துத்தெவித்தனர்.
இவ்வாறு அந்தப் பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.