தமிழகத்தில் இன்று
கிருஷ்ணா நீர் வர வாய்ப்பில்லை என்-கி-றார் அமைச்-சர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னைக்கு கிருஷ்ணா நீர் வரத்து நி ன்று போய் விட்டது. வருவதற்கும் தற்போது வாய்ப்பில்லை என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைருகன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
ஏப்ரல் மாத இறுதியில் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் கண்டலேறு - பூண்டி கால்வாய் மதகின் அடி மட்டத்திற்கு மேல் 2 மீட்டர் உயரத்திற்கு மேல்தண்ணீர் இருந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு மிகவும் மோசமான அளவில் இருந்ததினால், தமிழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திர அரசுகண்டலேறு நீர்த்தேக்கத்தினுள் உள்ள அணுகு கால்வாயை தூர்வாரி 3.5.2000 முதல் சென்னை மாநகருக்கு கிருஷ்ணா நீரை வழங்கியது.
இந்த ஏற்பாட்டின் மூலம் இதுவரை 100 மில்லியன் கன அடி தண்ணீர் பெற்றுள்ளோம். தற்போது கண்டலேறு நீர்த்தேக்கத்தில் கண்டலேறு - பூண்டிகால்வாயின் மதகு அடிமட்டத்திற்கு மேல் 140 மீட்டர் அளவே தண்ணீர் உள்ளது.
இதனால் தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து வினாடிக்கு 60 தல் 70 கனஅடி வீதம் கிருஷ்ணா தண்ணீர் கண்டலேறுவில் இருந்துதமிழகத்திற்கு விடப்படுகிறது.
இந்த தண்ணீர் வரும் வழியில் அதிகளவில் இறைக்கப்பட்டு, இழப்புகள் போக தமிழக எல்லையை அடைய முடியவில்லை. எனவே முற்றிலுமாக தண்ணீர்வரத்து நின்று போய் விட்டது.
தமிழகத்திற்கு கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் தற்போது நீர் மட்டம் தமிழக கால்வாயின் மதகின் அடிமட்டத்திற்கு 20 மீட்டர்கீழே உள்ளது.
இதனால் ஸ்ரீசைலம் அணையில் போதுமான அளவு நீர் வரத்து வந்த பின் நீர்மட்டம் போத்திரெட்டிப்பாடு மதகின் அடிமட்டத்திற்கு மேல் வந்தால் தான்தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும் கால்வாயின் மூலம் நீர் பெற முடியும்.
இதேபோல் சோமசீலா நீர்த்தேக்கத்திலும் தற்சமயம் தமிழகத்திற்கு தண்ணீர் பெறப்படும் சோமசீலா கண்டலேறு கால்வாயின் அடிமட்டத்திற்கு 3மீட்டர் கீழே நீர்மட்டம் உள்ளது. இதனால் சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்தும் கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு உடனடியாக தண்ணீர் பெற வாய்ப்பில்லைஎன்று கூறியுள்ளார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications