தமிழகத்தில் இன்று
புலிகளுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு சம்மதம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அமைதித் தீர்வு குறித்து விடுதலைப் புலிகளுடனும் பேச்சு நடத்த இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க எதிர்க்கட்சிகளுடன் ஆலோசைன நடத்திய அதிபர் சந்திரிகா அமைதித் தீர்வுத் திட்டம்ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் வட கிழக்கு மாகாணக் கவுன்சிலை அமைத்து இடைக்கால அரசை ஏற்படுத்த அவர்திட்டமிட்டிருந்தார். இருப்பினும் இதில் விடுதலைப் புலிகளுக்கு இடம் கிடையாது என்றும், இதுதொடர்பாக புலிகளுடன் பேச்சு நடத்த முடியாது என்றும் அவர்கூறியிருந்தார்.
சந்திரிகாவின் பிடிவாதப் போக்கு காரணமாக அமைதித் திட்டம் அமலாவதில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், விடுதலைப் புலிகளுடன் அமைதித்திட்டம் குறித்து அரசு பேச வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் புலிகளுடன் பேச சந்திரிகா இறங்கி வந்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் சந்திரிகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேஆகியோரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. சந்திரிகாவும், விக்ரமசிங்கேயும் தலைநகர் கொழும்பில் சந்திரிகா வீட்டில் 3 மணி நேரம் ஆலோசனைநடத்தினார்கள்.
இந்த ஆலோசனைக்குப் பின் இவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி புதிய அரசியல் சட்டதிருத்தம் குறித்து விடுதலைப்புலிகளுடன் கலந்து பேசி முடிவுகாண்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை அமைச்சர் டிஎம்.ஜெயரத்னே இத்தகவலை நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய அரசியல் திருத்த சட்டத்தை விடுதலைப்புலிகளிடம் சமர்பித்த பிறகு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என்று இருதலைவர்களும் தீர்மானித்து இருக்கிறார்கள் என்றார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடகிழக்குப் பகுதியில் தனிநிர்வாகம் கொடுப்பதற்கு ஆரம்பத்தில் இலங்கை எதிர்க்கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது.தற்போது தன் நிலையை மாற்றிக்கொண்டு அதிபர் சந்திரிகாவிடம் இதுகுறித்து ஒப்பந்தம் செய்திருப்பது முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications