தமிழகத்தில் இன்று
கேபிள் டிவி-க-ளுக்-குத்- தடை: கற்-காலம் நோக்-கிச் செல்-கிற-து- பாகிஸ்-தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெஷாவர்:
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லையில் உள்ள பெஷாவர் மாகாணத்தில் கேபிள் டிவிகளுக்கு மாநில ஆளுநர் தடை விதித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில ஆளுநர் முகம்மது ஷபீக் பெஷாவரில் நடந்த நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கூட்டமொன்றில் பேசுகையில், வியாழக்கிழமை முதல் பெஷாவர்மாகாணத்தில் கேபிள் டிவிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் பேசிய மத அறிஞர்கள், வெளிநாட்டு கேபிள் டிவிக்கள் மூலம் ஆபாசம் பரவுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்தே தடையுத்தரவைஆளுநர் பிறப்பித்தார்.
மெளலானா ஹாசன் ஜான் பேசுகையில், நமது நாட்டுக்கு விஞ்ஞானிகளும், அறிஞர்களும்தான் தேவை. நடிகர்களும், டான்ஸர்களும் நமக்குத் தேவையில்லைஎன்றார்.
சமீபத்தில்தான் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முஸ்லீம் மதகுருக்களின் (முல்லாக்கள்) கோரிக்கையை ராணுவ ஆட்சியாளர்முஷாரப் ஏற்றுக் கொண்டார். தற்போது ஒரு மாநிலத்தில் கேபிள் டிவிக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
பெஷாவர் மாநிலம், தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ளது. ஆப்கானிஸ்தானிலும் கேபிள் டிவிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முழுவதிலும் கேபிள் டிவிக்கள் மூலம், இந்திய மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, அரசின் இரண்டு சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேயர்கள் இல்லை.