தமிழகத்தில் இன்று
"சூப்பர் பாஸ்ட்" ரயிலாக மாறுகிறது சதாப்தி எக்ஸ்பிரஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:
கோவையிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஜூலை 1 ம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுகிறது. இதற்கானகட்டணமும் குறைக்கப்படுகிறது.
கோவை-சென்னை:
கோவை சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ் சேலம் வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ரயில் தற்போது சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படவுள்ளது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் குளிர்சாதனப்பெட்டி வசதியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கட்டணமும் அதிகமாக இருப்பதால் அதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களால்பயணம் செய்ய முடிவதில்லை.
மேலும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், உயர்அதிகாரிகள் மட்டுமே பயணம் செய்ய முடிகிறது.
இதனால் இந்த சதாப்தி எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்செய்யப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரயிலும் சதாப்தி ரயில் செல்லும் அதே வேகத்தில்தான் செல்லும். நேரத்திலும் மாற்றம் இல்லை.
முதல் வகுப்பு ஏசி இருக்கை வசதி, இரண்டாம் வகுப்பு என்ற 2 வகுப்புகள் மட்டுமே இருக்கும். பகல் நேர ரயில் என்பதால் தூங்கும் வசதி இருக்காது.
இந்த ரயில் காலை 6.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 8.32 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும்.
அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.35 க்குச் சென்றடையும்.
மீண்டும் அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு 7.03 மணிக்கு சேலத்தை வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மீண்டும்கோவை சென்றடையும்.
கட்டணம்: சூப்பர் பாஸ்ட் ரயிலில் முதல் வகுப்புக் கட்டணம் சென்னை -சேலத்திற்கு ரூ 302. சேலம் கோவைக்கு ரூ 212.
இரண்டாம் வகுப்பு கட்டணம் சென்னை-சேலம் ரூ 106. சேலம்-கோவைக்கு ரூ 73 ஆகும்.
இந்த ரயில் சேலம், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.