என்-கி-றார் -"தி-ரு"

Subscribe to Oneindia Tamil

சு-தா-க-ரன் தி-ரு-ம-ணம்: த-பால் மூலம் மட்-டும் 56,000 அழைப்-பி-தழ்-கள் impossible என்-கி-றார் -"தி-ரு"

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்திற்கு தபால் மூலம்அனுப்பப்பட்ட அழைப்பிதழ்கள் மட்டும் 56 ஆயிரம் என்று தனி நீதிமன்றத்தில்அ.தி.மு.க. தலைமை நிலைய முன்னாள் நிர்வாகி மகாலிங்கம் சாட்சியம் அளித்தார்.

முதலாவது தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா,சசிகலா, இளவரசி ஆகியோர் மீறிவாங்கிய சொத்துக்கள் பற்றிய வழக்கு விசாரணை நடைபெற்ரு வருகிறது, இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை மகாலிங்கம் சாட்சியம் அளித்தார்.

அவர் அளித்த சாட்சியம் வருமாறு:

சுதாகரனின் திருமணத்திற்காக ஆயிரக் கணக்கில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன.அதில் 56 ஆயிரம் அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னைத் தலைமைத் தபால் நிலையத்தில் ஒரு அழைப்பிதழுக்கு 4 ரூபாய் வீதம்தபால் தலை கட்டணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இப்பணத்தை முதல்வர் ஜெயலலிதா செயலாளர் ஜவகர் என்னிடம் தந்தார் என்றார்.

பின்னர் சூளைமேட்டில் லட்சுமி மார்பிளஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும்கன்னியபபன் என்பவர் சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், ஐதராபாத்தில் உள்ளதிராட்சைத் தோட்ட பங்களாவில் மார்பிள்ஸ் பதிக்க வேண்டும் என்று சசிகலாசொன்னார். அதன்படி, மார்பிள்ஸ் போட்டுக் கொடுத்தோம். அதற்கு ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுத்தார்.

சென்னை ஆலந்தூரில் ஜெயலலிதாவுக்கு ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் மார்பிள்ஸ்பதித்துக் கொடுத்தேன். அதற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பாக்கி தரவேண்டியுள்ளது. இன்னும் தரவில்லை.

சசிகலா கூறியதன் பேரில் மன்னார்குடியில் உள்ள செங்கமலத்தாய் மகளிர் கல்லூரியில்மார்பிள்ஸ் பதித்துக் கொடுத்தோம். அதற்கு 85 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+