தமிழகத்தில் இன்று
மிக்-27 போர் விமானங்கள் சிறப்பானவை தான்...சான்றிதழ் தருகிறார் ஏர்-மார்ஷல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரக்பூர்:
இந்திய விமானப்படையில் இடம் பெற்றுள்ள மிக்-27 ரக போர் விமானங்கள் இன்னும்சிறப்பாகவே உள்ளன என்று கிழக்குப் பிராந்திய விமானப்படை தலைமை அதிகாரிஏர் மார்ஷல் கே.என்.நாயர் கூறியுள்ளார்.
1947-ம் ஆண்டு முதல் இதுவரை, போர்களில் உயிர்நீத்த விமானப் படை வீரர்களுக்குஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் வெள்ளிக்கிழமைநடந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜூன் 12ம் தேதிகலைகுண்டா விமானப்படை தளத்தில் மிக்-27 ரக போர் விமானம்விபத்துக்குள்ளானது. இது முற்றிலும் தற்செயலான விபத்துதான். கடைசி நிமிஷத்தில்ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்தது.
விபத்துகளைத் தடுக்கும் விதத்தில்தான் செயல்படுகிறோம். இருப்பினும் எங்களதுகட்டுப்பாட்டையும் மீறி இதுபோன்ற சில விபத்துக்கள் அவ்வப்போது நடந்துவிடுகின்றன.
மிக்-27 ரக போர் விமானங்களை மேம்படுத்தத் தேவையான திட்டம் தீட்டப்பட்டு,அது அமலில் உள்ளது.
கார்கில் போர் உள்பட இதுவரை நடந்த ஐந்து போர்களிலும் கிழக்கப் பிராந்தியவிமானப்படைப் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வீரர்கள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவானவர்கள்.எந்தச் சூழ்நிலையிலும் செயல்படக் கூடிய உறுதியும், புத்தியும் கொண்டவர்கள்என்றார் அவர்.
நேபாள நாட்டு விமானப்படை விமானங்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் வந்துசெல்வதாக வரும் செய்திகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. இந்திய விமானப்படை தளத்திற்கு வந்துசெல்ல நேபாள விமானப்படை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications