மேட்ச் பிக்ஸிங்: சிபிஐ பிடியில் சிக்காமல் தப்பிவரும் முகேஷ் குப்தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தாஇன்னும் சிபிஐ பிடியில் சிக்காமல் உள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டை மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் சீர்குலைத்து வருகின்றன. மேட்ச்பிக்ஸிங் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸிகுரோனியேவிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையின்போது, இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா என்பவரை இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அறிமுகப்படுத்தியதாக குரோனியே தெரிவித்தார்.
இதையடுத்து, டெல்லியில் நகைக் கடை வைத்துள்ள முகேஷ் குமாரிடம் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முயன்றனர்.ஆனால், அதற்குள் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எங்கோ சென்றுவிட்டார். தற்போது அவர்எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.
முகேஷ் குப்தாவின் தந்தையிடம் நடத்திய விசாரணையிலும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.முகேஷ் குப்தா தலைமறைவாகவில்லை. அவர் தற்போது தனது குடும்பத்துடன் விடுறையில் உள்ளார். சிபிஐகேட்டுக் கொண்டால் அவரைத் தேவைப்பட்ட நேரத்தில் ஆஜர்படுத்துவதாக முகேஷ் குமாரின் வழக்கறிஞர் வினீத்மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
முகேஷ் குப்தாவிடம் விசாரணை நடத்தப்பட்டால்தான் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குமுழுமையான விடை கிடைக்கும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications