For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்ச் பிக்ஸிங்: சிபிஐ பிடியில் சிக்காமல் தப்பிவரும் முகேஷ் குப்தா

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தாஇன்னும் சிபிஐ பிடியில் சிக்காமல் உள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.

சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டை மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் சீர்குலைத்து வருகின்றன. மேட்ச்பிக்ஸிங் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸிகுரோனியேவிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையின்போது, இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா என்பவரை இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அறிமுகப்படுத்தியதாக குரோனியே தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லியில் நகைக் கடை வைத்துள்ள முகேஷ் குமாரிடம் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முயன்றனர்.ஆனால், அதற்குள் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எங்கோ சென்றுவிட்டார். தற்போது அவர்எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.

முகேஷ் குப்தாவின் தந்தையிடம் நடத்திய விசாரணையிலும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.முகேஷ் குப்தா தலைமறைவாகவில்லை. அவர் தற்போது தனது குடும்பத்துடன் விடுறையில் உள்ளார். சிபிஐகேட்டுக் கொண்டால் அவரைத் தேவைப்பட்ட நேரத்தில் ஆஜர்படுத்துவதாக முகேஷ் குமாரின் வழக்கறிஞர் வினீத்மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

முகேஷ் குப்தாவிடம் விசாரணை நடத்தப்பட்டால்தான் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குமுழுமையான விடை கிடைக்கும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X