தமிழகத்தில் இன்று
-க-ராத்-தே மாஸ்-டர் உசைனி வீட்டில் போலீஸ் ரெய்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஹை புரொபைல் என்ற பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கராத்தே வீரர் ஷிஹான் உசைனி வீட்டில் சென்னைமாநகரப் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக உசைனி மீது வந்தபுகார்களை அடுத்து இச் சோதனை நடத்தப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
உசைனி வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று கூறிய போலீஸார், அவர் கைது செய்யப்பட்டுள்ளாராஎன்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில், அவரது ஹை புரொபைல் நிறுவனத்தின்க கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நிறுவனங்களில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சரியான சம்பளம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
போலி பாஸ்போர்டுகள் மூலம் தன்னுடன் சில கராத்தே வீரர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லமுயன்றதாக சில மாதங்களுக்கு முன் டெல்லி போலீஸாரால் உசைனி கைது செய்யப்பட்டு திகார் சிறையில்அடைக்கப்பட்டிருந்தார்.
கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கியவரான உசைனி, போலீஸ் கமாண்டோக்களுக்கும் கராத்தே பயிற்சிஅளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications