தமிழகத்தில் இன்று
தனி ஈழம் கேட்-டு தீர்-மா-னம் நி--ற--வேற்-று--கி-றார் வைகோ
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கைப் பிரச்னைக்கு தனி ஈழம் தான் நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெறும மதி-முக மா-நாட்டில்தீர்மானம் -நிறைவேற்றுவோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ -கூ-றி-னார்.
அரியலூரில் நி-ரு-பர்-க-ளி-டம் வைகோ கூ-று-கை-யி-ல-து-சி
மாநில கட்சிகளின் கூட்டணியுடன் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி ஆட்சி செய்கிறது என்பதை பொதுமக்களுக்குவிளக்கிட தான் ஈரோடு மாநிாடு -நடைபெறவுள்ளது. இந்த மா-நாட்டில் -நிறைவேற்றப்பட உள்ள பல தீர்மானங்களில் ஒன்று தான்இலங்கைப் பிரச்னைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்பது.
நாங்கள் தமிழர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். தமிழர்களை காக்க இந்திய ராணுவத்தை அனுப்பவேண்டும் அல்லது வாஜ்பாய் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறவில்லை.
தமிழர்களுக்கு எங்கும் தீங்கு ஏற்படக் கூடாது என்பது எங்கள் விருப்பம். இதை புரிந்து கொள்ளாமல் சில தலைவர்கள் எங்கள்கட்சியை தடை செய்ய வேண்டும், பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்கின்றனர்.
தமிழர்களுக்கு ஆதரவாக பேசக் கூடாது என்று தடை விதித்தால், தமிழ் மக்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. மா-நிலஉணர்வுகளை அலட்சியப்படுத்தக் கூடாது. அது ஒட்டுமொத்த -நாட்டுக்கே -நல்லதல்ல.
பிராந்தியக் கட்சிகளின் உணர்வுகளை மதிக்காமல், காங்கிரஸ் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் உடன்பாடு வைத்துக்கொண்டதால் அங்கு தீவிரவாதம் வளர்ந்தது. அதுபோன்ற -நிலை தமிழகத்திற்கு வர வேண்டாம் என்று -நாங்கள் -நினைக்கிறோம்என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications