முகத்தில் தெளித்த சாரல்...
68 மணி நேர "நான் ஸ்டாப் கான்ட்ராக்ட் சரக்கு ரயில் அறிமுகம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு, எங்கும் நிற்காத 68 மணி நேரத்தில் செல்லக் கூடிய காண்ட்ராக்ட் சரக்கு ரயில் ஞாயிற்றுக் கிழமை முதல்இயக்கப்படுகிறது.
இதனால் சென்னையிலிருந்து கல்கத்தாவிற்கு 68 மணி நேரத்தில் சரக்குகளைஅனுப்பமுடியும். இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர்மம்தா பானர்ஜி அறிவித்தபடி, இந்த சரக்கு ரயில் விடப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் கல்கத்தாவிருந்து பகல் ஒரு மணிக்கு கிளம்பும் இந்த சரக்கு ரயில், வேறு எங்கும் நிற்காமல் 68 மணிநேரத்தில், புதன் கிழமை காலை 9 மணிக்கு சென்னை வந்து சேரும்.
அதே போல ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் சரக்கு ரயில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஒரு மணிக்குகல்கத்தா சென்றடையும்.
நாட்டின் சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை அதிகப்படுத்தும் வகையில் இது போன்ற பல ரயில்கள் எதிர்காலத்தில் விட ரயில்வே அமைச்சகம்முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது தான் இது போன்ற குறிப்பிட்ட நேர சரக்கு ரயில்கள் விடப்படுகின்றன.