தமிழகத்தில் இன்று
லண்டன்:
லண்டனில் முதன் முறையாக -இந்-தி-ய திரைப்பட விழா மிக சிறப்பாக நடந்-த--து.
பாலிவுட் என்றழைக்கப்படும் மும்பை திரையுலகைச் சேர்ந்த பல முன்-ன-ணிநட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர். இந்த விருது வழங்கும் விழா உலகப் புகழ் பெற்றஆஸ்கார் விருது வழங்கும் விழா போல் மிகச் சிறப்-பா-க நடந்-த-து-.
இந்த விழா இந்தி திரைப்படங்க-ளுக்-கு சர்வதேச அளவில் புகழ் கிடைக்கச்செய்-வ-தற்-கா-க நடத்தப்பட்டுள்ளது. இந்தி திரைப்பட உலக அளவில் இரண்டாவதுஇடத்தில் உள்ளது. இந்-தித் திரைப்-ப-டங்-க-ளுக்-கு வருடத்திற்கு 800 மில்லியன்டிக்கெட்டுகள் விற்கப்படுகிற-து.
இந்த விழாவில சிறந்த நடிகர், நடிகைளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகையாக "ஹம் தில் தே சுகே சனம்" படத்தில் நடித்த ஐஸவர்யா ராயுக்கும்,சிறந்த நடிகராக "வாஸ்தவ்" படத்தில் நடித்ததற்காக சஞ்-சய் தத் விருது பெற்றனர்,
50 வருடங்களாக தனது மாறாத குயில் குரலால் உலகெங்கும் பல ரசிகர்களை -கட்டிப்போட்டி-ருக்கும் லதா மங்கேஷ்கருக்கு அவரது சேவையை பாராட்டி விருதுவழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படமாக "ஹம் தில் தே சுகே சனம்" தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருது "பீவி நம்பர் ஒன் "படத்தில் நடித்த சுஷ்மிதாசென்னுக்கு வழங்கப்பட்டது.
"தால்" படத்திற்காக அனில் கபூருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.
இந்த விழாவில் "எலி-ச-பத்" படத்தை இயக்கிய சேகர் கபூர் கலந்து கொண்டார். இந்தவிழாவில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் -ஜாக்-கி -சா-னுக்-கு அவரது சாதனையை பாராட்டிவிருது வழங்கப்பட்டது.